India

Uganda

United Kingdom

Malaysia

43. பிரிட்டனில் பொங்கல் விழா!

ஞாயிறு, ஜனவரி 22, 2012

இன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழுவினர் கரோக்கி மூலம் பாடல்கள் பாடினர். அதன் பின்னர் சிறுவர் சிறுமியர்களுக்கான வினாடி வினா நடத்தப்பட்டது. அதில் சர்க்கரைப் பொங்கல் அணி வெண்பொங்கல் அணியைத் தோற்கடித்தது. பின்னர் பெண்கள் ஆடினார்கள், கோலாட்டம் போல் ஆரம்பித்துப் பின்னர் அனைத்து வகை நடனங்களும் ஆடினர். அதன் பின்னர் ஆண்கள் குழு ஆடியது. பாடல்களுக்கு நடிகர்கள் போல் ஆடினர். இதன் நடுவிலேயே சாப்பாடு பரிமாற ஆரம்பித்தனர். ஒரு இட்லி, சட்னி, சாம்பார், சிறிது சாதம், புளிக்குழம்பு, சிறிது ஃப்ரைடு ரைஸ், கொஞ்சம் மெது பக்கோடா, பாயசம் மற்றும் அப்பளம். அனைத்தும் நன்றாகவே இருந்தன. கிட்டத்தட்ட 150க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். Bracknell மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதே எனக்கு இன்றுதான் தெரிந்தது.

இந்நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள் கீழே...

நண்பர் ஒருவர் எம்ஜிஆர் வேடத்தில் கலக்குகிறார்.

ஆண்கள் ஆடுகிறார்கள்

பெண்கள் கொண்டாட்டம்.

இன்னிசைக் குழு.

ஒரு சிறுமி பாடுகிறாள்.

காவடியாட்டம்.

சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சி.

கரகாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆட்டம் பாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆர்கெஸ்ட்ரா.

இவை தவிர மூன்று சிறுமிகள் சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு சிறு பகுதியை நாடகமாக நடத்தினார்கள். மற்றொரு சிறுமி கர்னாடக இசைக் கச்சேரி வழங்கினாள். மிகவும் நன்றாக இருந்தது. அவற்றைப் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். 

நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நல்ல முறையில் இருந்தது. யாரோ ஒருவர் அசிங்கத்தை மிதித்து விட்டு அரங்கிற்குள் நுழைந்து விட்டார். ஏதேனும் சிறுவர்களாக இருக்கலாம். விழா ஏற்பாடு செய்த நண்பர் ஒருவர், அருவெறுப்புப் படாமல் அதைத் துடைத்து வெளியே போட்டார். நாங்கள் சாப்பிட்ட பிளேட்களை ஒரு பெண்கள் சிலர் கவனமாக வாங்கி அடுக்கி வைத்தார்கள். அவர்களுக்கு இதெல்லாம் செய்ய வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. ஆனாலும் விழா சிறப்பாக நடக்க அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.