India

Uganda

United Kingdom

Malaysia

18. தேர்தல் கால வதந்திகள்...

வெள்ளி, பிப்ரவரி 24, 2006

நேற்று தேர்தல். தேர்தலுக்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னரே, கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு விடும் என்று, ஒரு மாதத்திற்கு முன்னால் கூறப்பட்டது. அது ஒரு வாரமாகச் சுருங்கி, பின் மூன்று நாட்களாகி, கடைசியில், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை எல்லாக் கடைகளும் திறந்தே இருந்தன. வழக்கத்திற்கு மாறாக, நாடே அமைதியாக இருக்கிறது. நேற்று இரவு முதலே, வதந்திகள் உலா வரத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சி (The Forum for Democratic Change - NRM)ஐ சேர்ந்த Col. Besigye நகர்புறங்களில் முன்னணியில் இருக்கிறார். நிறைய குஜராத்திகள் பயத்தில் இருக்கிறார்கள். இருக்காதா பின்னே, நூற்றுக்கு எழுபதிற்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் ஆயிற்றே..கடந்த சனியன்று, குடியேற்ற அதிகாரிகள், திடீர் சோதனையிட்டதில் ஏகப்பட்ட குஜராத்திகளும், மூன்று தமிழர்களும் மாட்டினர் (சனிக்கிழமை என்பதால் நிறைய பேர் தப்பித்து விட்டனர்)எதிர்க்கட்சி ஜெயித்தால் நிறைய பிரச்சினைகள் வரும் என இவர்கள் நினைக்கிறார்கள். எனக்கென்னவோ, யார் ஜெயித்தாலும், இதுபோல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு தொல்லைதான் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள், சொந்த ஊருக்குச் செல்லாமல், எதிர்காலத்திலும் எப்போது செல்வோம் என்பதே தெரியாமல், வாழ்ந்து வரும் இவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

சரி, விசயத்திற்கு வருவோம், என் House Girl போனமுறையும் இப்படித்தான் இருந்தது என்கிறாள். கிராமப்புறங்களில் ஓட்டு எண்ணிக்கையைத் தொடங்கும் போது, முசே (இவர்கள் மொழியில் முசே என்றால் பெரியவர் என்று அர்த்தம்) President. Yoweri Kaguta Museveni முன்னணிக்கு வந்து விடுவார் என்கிறாள். ஜெயிக்கிறாரோ இல்லையோ, அவர்தான் அடுத்த ஜனாதிபதியாக அறிவிக்கப் படுவார் என்று ஒரு வதந்தியும் நிலவுகிறது. இதுவரை ஒரு வன்முறையும் நடந்ததாக தகவல்கள் இல்லை.(காலை 5 மணிக்கு கேட்ட துப்பாக்கிச் சத்தத்தைத் தவிர Mbale அமைதியாகத்தான் காட்சியளிக்கிறது)

கடையை இரண்டு நாட்கள் மூடிவிடுமாறு மேலிட உத்தரவு கிடைத்துள்ளது.(நேற்றும், இன்றும்). யார் செய்த புண்ணியமோ, இன்னும் மின்சாரத்தடை ஏற்படவில்லை. வீட்டில் 24 மணி நேரமும் அடைந்து கிடப்பது அலுப்பூட்டுகிறது. தமிழ் டி.வி யும் கிடையாது. குஜாராத்திகளின் பஜனையை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது?

வதந்திகள் எந்த அளவுக்கு நம்பகமானவை என்பது நாளை மாலை தெரிந்து விடும். நாளை எழுதுகிறேன் (மின்சார பகவான் கருணை காட்டினால்...)

0 கருத்துகள்: