India

Uganda

United Kingdom

Malaysia

20. பிங்க் நிற மனிதர்கள்...

வெள்ளி, மார்ச் 10, 2006

இங்கே வந்த புதிதில், இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியமாக இருந்தது. காரணம் நூற்றுக்கு 90 சதவீதம் ஆண்கள் தலையை சுத்தமாக மழித்திருப்பதுதான். பெண்களும் நிறைய பேர் மொட்டைத்தலையுடன்தான் இருக்கிறார்கள். இயற்கையாக இவர்கள் முடி மிகவும் சுருட்டையாகவும், மெலிதான் பஞ்சு போல் இருப்பதாலும், படிவதில்லை. முடி நிறைய வளர்ந்தால் கிட்டத்தட்ட சாய்பாபா style ல் வளர்கிறது.சிறு வயதிலிருந்தே இப்படி தலையை மழித்து மழித்து, லேசாக முடி வளர்ந்தாலே இவர்களுக்கு அரிக்க ஆரம்பித்துவிடும். உடனே வீட்டில் அவர்களாகவே மொட்டையடித்துக் கொள்கிறார்கள்.

பெண்கள், பள்ளியில் படிக்கும் போது முடி வைத்துக் கொள்ளக்கூடாது என பல பள்ளிகள் கட்டுப்பாடு வைத்துள்ளன. ஒரு இஞ்ச் வரை அனுமதிக்கிறார்கள். இவர்கள் முடியே வெட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அது தோள்பட்டைக்கு கீழே வளர மாட்டேனென்கிறது. அதுவும் அருக்காணி Style ல் தூக்கிக்கொண்டு இருக்கிறது. இப்படி அடங்காமுடியாகவும், கொஞ்சமாகவும் வளர்வதால், முடியை அலங்காரம் செய்ய நிறைய பணமும், நேரமும் செலவிடுகிறார்கள். நாடு நெடுக முடியலங்கார நிலையங்கள் இருக்கின்றன, எப்போதும் கூட்டத்துடன்.


 
 
 
 

முடியை ஒருவிதமான Lotion தடவினால்தான் கொஞ்சமாவது படிகிறது. அதன் பின் கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவழித்து, மெலிதான சிறு சிறு சடைகளாகத் திரித்து அலங்கரித்துக் கொள்கிறார்கள். இதில் உபரி வசதி ஒன்றும் இருக்கிறது, தலை முழுக வேண்டாம். சென்ட் கொஞ்சம் சேர்த்து அடித்துக் கொண்டால் போதும்.

ஆப்பிரிக்காவில் முழுக்க முழுக்க கருப்பர்கள்தான் இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இங்கே நிறைய கலப்பின மக்களும் இருக்கிறார்கள். முக்கியமாக, அரேபிய-ஆப்பிரிக்க கலப்பு. இவர்களை சவுதாரா எனக் குறிப்பிடுகிறார்கள்.இந்திய ஆப்பிரிக்க கலப்பும் இருக்கிறது. சவுதாராக்கள், வெள்ளையாக சற்றே செம்பட்டையான, லேசான சுருட்டைத்தலையுடன் இருக்கிறார்கள்.இவர்கள் போக பக்கத்து, கென்ய, சோமாலிய நாட்டினரும் இருக்கிறார்கள். சோமாலியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள். இவர்களைத் தவிர, சில ஆப்பிரிக்கர்கள் பிளீச் செய்து, கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது, ஒரு விதமான பிங்க் நிறத்தில் வினோதமாக் காட்சியளிக்கிறார்கள்.

உகாண்டாவின் பாரம்பரிய உடையை வயதானவர்கள் மட்டுமே உடுத்துகிறார்கள். அதுவும் கிராமங்களில் இருப்பவர்கள் மட்டுமே. மற்றபடிக்கு எல்லோருமே மேற்கத்திய உடைகள்தான். மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்கிறார்கள். மொழியும் அப்படித்தான்.எளிதில் வசப்படுபவர்கள் போலிருக்கிறது.

நம்மையும்தான் வெள்ளைக்காரன் 200 வருடங்கள் ஆட்சி செய்தான். இருந்தாலும் நம்மவர்களால் ஏன் ஒழுங்காக எல்லோராலும் பிழையின்றி ஆங்கிலம் பேச முடிவதில்லை?? என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஆந்திர நண்பர் ஒருவர், கடையில் வேலை பார்ப்பவர்களை அடுத்த நாள் காலையில் சற்று நேரம் முன்னதாக வர வேண்டும் என சொல்ல விரும்பினார். அதற்கு அவர் சொன்னது...

"Yesterday everybody should come on 8 o' clock. Nobody should told funny funny reasons".

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவர் சொன்னதைப் புரிந்து கொள்ளவே 10 நிமிடங்கள் தேவைப்பட்டன.இவர், இதற்குப் பேசாமல் சைகை பாஷையிலேயே சொல்லியிருந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பதிவில்...

நாலு நாளா, நாலப் பத்தி யோசிக்க வச்சிட்டாரு நம்ம மணியன்... Posted by Picasa

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

raamu...nall rasanaiyoda ezhuthiirukkapa..keep it up..konjam azhagana ponnunga photova podakoodatha??

11:33 PM
Costal Demon சொன்னது…

ஹி ஹி இருக்கிறததானே போட முடியும். :-)

7:11 AM
Thendral O சொன்னது…

romba jollu vidathe ramu..naan than raja from kashi.. konjam azhagana ponna parthu photo pudichu poduppa.... pliz

12:44 AM