India

Uganda

United Kingdom

Malaysia

36. 2011

ஞாயிறு, ஜனவரி 02, 2011

புது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன்? 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா? யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருபுரு கருபுரு, யூ வார் அண்டர் அரெஸ்ட்...). வழக்கமாகப் பாட்டிலுடன் தொடங்கும் புதுவருடம் வாழ்க்கையிலேயே முதன்முறையாக இரவு 12 மணி பூஜையுடன் தெடங்கியிருக்கிறது. மனைவிக்கு நன்றி. காலையில் லண்டனில் இருக்கும் பிரம்ம குமாரிகள் உலக மையத்திற்குச் மனைவி அழைத்துச் சென்றாள். பத்து நிமிட தியானம். (டென்சன் ஆவாதீங்க... நான் இல்ல... நான் இல்ல... அவள்தான்) எலுமிச்சை சாதம் போல ஒன்றும், காபியும் இருந்தது. (இது எனக்குத்தான்...) அங்கிருந்து ஃபெல்த்தாம் சினிவேல்ட்... பதினைந்து நிமிடம் தாமதம். மன்மதன் அம்பு பார்க்க முடியாமல் ஊர் திரும்பினோம். இந்த வருடமாவது கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டும். பார்க்கலாம். ரொம்ப நாளா யாருமே வராததினால என் வலைப்பதிவுக்குள்ளே வர எனக்கே பயமா இருக்கு!!!. இருந்தாலும் யாரும் தைரியமா நுழைஞ்சிருந்தா உங்களுக்கு என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

0 கருத்துகள்: