India

Uganda

United Kingdom

Malaysia

40. மற்றுமொரு இடைவேளை

செவ்வாய், நவம்பர் 08, 2011

2007 February -ல் கூட நான் மேற்படிப்பு படிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. 1998-ல் B.Pharmacy முடித்த பின் ஒரு நாள் கூட Pharmacist ஆகப் பணிபுரியாமல் Marketing-ல் சேர்ந்தேன், பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக. நான்கு வருடங்கள் பட்டப்படிப்பு முடித்தவனுக்கு, அரசாங்க வேலைக்கு வாய்ப்பே இல்லை. தனியார் மருத்துவமனையில் 2,000 முதல் 4,000 ரூபாய் வரையும், மருந்துக் கம்பெனிகளில் Production Chemist-ஆகச் சேர்ந்தால் கிட்டத்தட்ட அதே அளவுக்கும்தான் காசு வரும். மருந்துவப் பிரதிநிதி வேலைக்குத்தான் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை கிடைத்தது.

ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வேலை செய்யலாம் பின்னர் வேறு வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்துச் சேர்ந்தேன். அது ஐந்தரை வருடங்களாக நீண்டு விட்டது. கடைசி கடைசியில் வேலையில் ஆர்வம் சுத்தமாகக் குறைந்து விட்டது. வேறு வேலைக்குப் போக வேண்டுமென்றால் அதற்கான முனைப்பு வேண்டும். இந்த வேலையில் இருக்கும் வரையிலும் வேறு வேலை தேட முடியாது என்று தோன்றிய போது,  வேலையை விட்டு விட்டேன், வேறு வேலை கிடைக்கும் முன்னரே. கிட்டத்தட்ட 5 மாதங்கள் வெளி நாடுகளுக்குச் செல்ல முயற்சி செய்தேன். அப்போதும் மேலே படிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

ஒரு வழியாக என் நண்பன் ரஜினிகாந்த்தின் உதவியுடன் உகாண்டாவிற்குச் சென்றேன். Pharmacy Manager-ஆக. அங்கே இரண்டரை வருடங்கள். அந்த வேலையை மிகுந்த ஈடுபாட்டுடனே செய்து வந்தேன். இந்தமுறை பிரச்சனை மலேரியா மூலம் வந்தது. இரண்டரை வருடங்களில் கிட்டத்தட்ட 6 முறை மலேரியா வந்து படுத்தியது. அதிலும் ஒருமுறை Falciparum மலேரியா வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் அவதிப்பட்டேன். மற்றோரு பிரச்சினை திருமணத்திற்குப் பெண் கிடைக்காமலிருந்ததில் வந்தது. உகாண்டா என்றதுமே எல்லாப் பெண் வீட்டாரும் பின்வாங்கினர்.
 
மீண்டும் வேறு ஏதாவது வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தபோதுதான் என் தம்பி பிரிட்டனுக்கு வந்து விடு என்றான். அப்போது என் நண்பன் மணிகண்டன் மான்செஸ்டர் பல்கலையில் Ph.D படித்துக் கொண்டிருந்ததால் அவனைத் தொடர்பு கொண்டேன். அவன் முயற்சி எடுத்து பல Supervisor களிடம் தொடர்பு கொண்டு Cancer Biology-ல் இடம் வாங்கிக் கொடுத்தான். 2007 ஜூலையில் மான்செஸ்டர் பல்கலையில் சேர்ந்தேன். நான்கு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. 2010 ஜூனில் Thesis முடித்து செப்டம்பரில் Viva-ம் முடித்து, அக்டோபரில் Corrections-ம் முடித்தாயிற்று. இதனிடையில் கிடைத்த 6 மாத Research Assistant வேலையும் சரியாக் அக்டோபரில் முடிந்தது. Ph.D யில் செய்த வேலையையும் பேப்பருக்கு அனுப்பியாகி விட்டது. மீண்டும் வேலை தேடும் படலம். கையில் Ph.D இருப்பதால் இம்முறை தைரியமாகவே இருக்கிறேன். பார்க்கலாம்...

1 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

அருமையான எழுத்து நடை

10:56 PM