India

Uganda

United Kingdom

Malaysia

27. தைரியமான ஆண்களுக்கு மட்டும்....

புதன், நவம்பர் 22, 2006

நம்மூர் ஆண்கள் தைரியத்தை வெளிக்காட்ட, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போல, இங்கே ஒரு குறிப்பிட்ட இன மக்கள் ஒரு காரியம் செய்து தங்கள் தைரியத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

முகிசு என்ற அந்த இனத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக அந்த வீர சாகசத்தைப் பண்ணியாக வேண்டும். அதுவும் சிறு வயதில் இதை செய்து காட்ட அனுமதி இல்லை. வயதுக்கு வந்த ஆண்கள் (!) மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த சாகசத்தை செய்யாவிட்டால் அந்த ஆணைத் திருமணம் செய்ய எந்த அழகியும் முன்வரமாட்டாள்.

இந்த வீர விளையாட்டிற்குப் பயந்துபோய் புதரில் ஒளிந்து கொண்டு வாழ நினைத்தாலும் முடியாது. இதற்கென அமைக்கப்ப்ட்டிருக்கும் புதர் ஒழிப்புக் கமிட்டி ஒன்று, ஒரு புதர் விடாமல் தேடி அவர்களைக் கண்டுபிடித்து விளையாட்டை நடத்தி முடித்து விடுவார்கள்.

பண்டைக்காலத்தில் நம்மூரில் குழந்தை இறந்தே பிறந்தால், அதன் மார்பில் வாளால் கீறி அதன் பிறகுதான் தகனம் செய்வார்களாம். இந்த மேட்டரை எப்படியோ தெரிந்து கொண்ட இந்த மக்களும், இறந்து பிறந்த குழந்தைக்கும் இதை செய்துதான் புதைப்பார்கள்.

இந்த இனத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், மற்ற இனத்தைச் சேர்ந்த ஆண்களும் இதைச் செய்து காட்ட வேண்டும்.

போதும்டா பில்ட் அப்பு, மேட்டரைச் சொல்லுங்கிறீங்களா... வர்றேன். அதுக்குத்தான் வர்றேன். அதாகப் பட்டது, முகிசு ஆண் ஒருவன் வயதுக்கு வந்துவிட்டான் என என்று உலகிற்கு அறிவிக்கும் உன்னத முயற்சி இது. ந்ம்மூரில் பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா என்று நடத்துகிறார்களே, அதைப் போல்தான் இது.

அன்றைய தின விழாவில் கலந்து கொள்ள உற்றார் உறவினர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி, அந்த தினத்தன்று அந்தப் பையனை மணலால் (களிமண் போல இருக்கிறது) குளிப்பாட்டுகிறார்கள். அதன் பின் தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு அனைவரும் ஊர்வலம் செல்கிறார்கள். (ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காகத்தான்..) பின் இதற்காகவே அமைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு பூசாரி இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பையன் கொஞ்சம் பயந்தவனாக இருந்தால் சரக்கடித்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள். அதன் பின்னர் அனைவரும் ஆடிப்பாடுகிறார்கள். பின் பையனின் ஆடை களையப் படுகிறது. பூசாரி கத்தியுடன் பையனை நெருங்குகிறார். மக்கள் அனைவரும் குலை போடுவது போல் பயங்கரமாக கத்துகிறார்கள். அதன் பின் என்ன நடந்திருக்கும் என உங்களால் ஊகிக்க முடிந்திருக்கும்.

ஆமாம் மக்களே அதேதான். தினமலர் பாசையில் சொன்னால் "நறுக்". இரத்தம் செட்டச் சொட்ட அதில் மெத்திலேட்டட் ஸ்பிரிட் அல்லது டிங்சர் ஊற்றுகிறார்கள். மக்கள் அனைவரும் பையனின் தைரியத்தில் மெய்மறந்து கைதட்டுகிறார்கள். இதில் மிகவும் தைரியமான ஆண்கள் செய்வதைக் கேட்டால் நீங்களே மெய்சிலீர்த்து விடுவீர்கள்... அது என்னவென்றால் நம்மூரில் சமைக்கப் பயன்படும் மிளகாய்தூளையும், உப்பையும் கலந்து அந்த இடத்தில் பூசிக் கொள்வார்கள்... (அடப் பாவிகளா... என்ன, சமைக்கவா போறீங்க...)
இந்த வீர விளையாட்டைப் பற்றி கேள்விப்ப்ட்ட நாளிலிருந்தே முகிசு இனப் பெண்களைப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. அங்கே யாருக்கும் தைரியம் இருந்தால் சொல்லுங்கள்... பரவாயில்லை பிளைட் டிக்கெட்டை நீங்களே எடுத்துக்குங்க... வர்றதுக்கு முன்னாடி தெரியப்படுத்துங்க. ஊரைக்கூட்டி அமர்களம் பண்ணீறலாம்...

2 கருத்துகள்:

NONO சொன்னது…

இப்படி Anthropology சார்த கட்டுரை(?) எழு தேக்க ஒழுங்கா எழுதினா குறைந்தா போய்யிருவீங்க.... இதில தினமலர் பாசையில் வேற...???!!!:-(

5:43 AM
யூர்கன் க்ருகியர் சொன்னது…

"நறுக்".

அப்படின்னா ??

4:40 AM