India

Uganda

United Kingdom

Malaysia

12. காவிரி, பூமத்தியரேகை மற்றும் நான்...

ஞாயிறு, ஜனவரி 29, 2006

உகாண்டாவில் வேலை என்றவுடனேயே, ஏகப்பட்ட எதிர்மறையான விமரிசனங்கள். வேற நாடே கிடைக்கலையாக்கும்...போயும் போயும் உகாண்டாதான் கிடைச்சதாக்கும்...இதுக்குப் பேசாமா, பாத்துக்கிட்டு இருக்குற ரெப் வேலையவே பாக்கலாமுல்ல...இப்படி இலவச அறிவுரைகள் கொடுப்பதில், நம்மவர்களை அடித்துக் கொள்ள வேறு யாராலும் முடியாது. இது போதாதென்று, இடி அமீன் (இடி அமீன் நாடு கடத்தப்பட்ட விசயமே தெரியாதவர்கள்..), ஆப்பிரிக்கா முழுக்க பாலைவனம்தான், வெயில் தாங்க முடியாது(கனவிலாவது ஆப்பிரிக்காவை பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்) போன்ற சந்தேக பயமுறுத்தல்கள்..பத்தாக்குறைக்கு மாமா, பூமத்திய ரேகை உகாண்டா வழியாத்தான் போகுது..அதனால வெயில் அதிகமாத்தான் இருக்கும்..இப்படி விஞ்ஞான ரீதியாக பயமுறுத்திய என் அக்கா பையன்...இதற்கிடையில் நண்பன் ஒருவன் ஃபோன் போட்டு, உகாண்டால ஃபிரீ செக்ஸாம்டா..பார்த்து அடக்க ஒடுக்கமா இருந்துக்கோ..எயிட்ஸ்,கியிட்ஸ் வந்திடப் போகுது என்று பீதியைக் கிளப்பினான்

எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்து, மும்பை விமான நிலையம் வந்து, ஒரு மாதிரியான வித்தியாசமான தலையலங்காரமும், வினேதமான உடையலங்காரமுமாக இருந்த கறுப்பின மக்களைப் பார்த்த போதுதான், இனி இரண்டு வருடங்களுக்கு, இவர்களோடுதான் மாரடிக்க வேண்டும் என்ற உண்மை உரைத்தது.

இதில்,கம்பெனி ஏற்பாடு செய்திருந்த விமானம் அனேகமாக விமான கம்பெனிகள் வரிசையில், டவுன்பஸ் ரேஞ்சுக்கு இருக்கும் போலிருக்கிறது..கம்பெனியைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் முதலில் கொடுத்த டிக்கெட்டை, இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டுமென்று, மாற்றச் சொன்னதில், விமானக் கம்பெனியையும் மாற்றி விட்டார்கள்.விதி...இடம் ஒதுக்கிக் கொடுப்பதிலிருந்து, (இரவு பண்ணிரண்டு மணிக்கு ஜன்னலோர இருக்கைக்காக சண்டை போட்ட குஜராத்தி தம்பதியினர், காலை விடிவதற்கு முன்பே முடிந்துவிட்ட பயணத்தில், ஜன்னல் வழியாக எதைப் பார்த்தார்கள் என்பது, இன்று வரை விளங்கவில்லை எனக்கு), போர்த்திக் கொள்ள கம்பளி கேட்டத்ற்கு, தீர்ந்து போய் விட்டது எனச் சொன்ன விமானப் பணிப்பெண் வரை ஏகப்பட்ட சொத்ப்பல்கள்.. இரவிலேயே ஆடிஸ் அபாபா, நைரோபி எல்லாம் நின்று காலை 6 மணிக்கு என்டபி வந்து சேர்ந்தாயிற்று..

பூமத்திய ரேகை இந்த வழியாகத்தான் போகிறது என்று ஓரிடத்தில் சொன்னார் நண்பர். ஏதாவது சிலீர்ப்பு ஏற்படுகிறதா எனப் பார்த்தேன்.(காவிரியை முதன்முதலில் பார்த்தபோது, நிஜமாகவே சிலீர்த்தது..) ஒரு புடலங்காயும் ஏற்படவில்லை...காவிரி நிஜம்..பூமத்திய ரேகை கற்பனை என்பதனால் இருக்குமென நினைத்துக் கொண்டேன்.

திடீரென நண்பன் சொன்னது, நினைவுக்கு வர, கார் ஓட்டிக் கொண்டிருந்த நண்பரிடம், உகாண்டால ஃபிரீ செக்ஸ்ஸுன்றாங்களே உண்மையா என்றேன். நண்பர் அவசரமாக, இல்லை, இல்லை.. இங்கேயும் காசு கொடுக்கனும் என்றார்.

நாளை பார்ப்போமா...

அன்புடன்,
இராம்

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Test

5:23 AM
பெயரில்லா சொன்னது…

Nicely written. Keep writing

12:10 PM
Costal Demon சொன்னது…

NanRingka Ananad

12:20 PM
பெயரில்லா சொன்னது…

உகாண்டாவில் எடுத்த படங்கள் இருந்தால் காண்பிக்கலாமே !

4:52 AM
பெயரில்லா சொன்னது…

Hi Rams,
Equator is not an imaginary line. there are physical difference in the behavior of certain particles in motion above and below the equator. for ex if you take a bucket with whole in the middle of the base and fill it with water the water will form a swirl when it leaks down... if you do this above the equator (even several foot above is enough) it'll swirl to right if you just cross the equator and do it belo it'll do opposite.. if you manage to do it exactly on the equator line it won't make a swirl. so only lattitudes& longitudes are imaginary not equator.. sorry if you think i'm very pedantic :)

1:37 AM
Costal Demon சொன்னது…

ஹி..ஹி.. (தலையை சொறியற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க..) தகவலுக்கு நன்றி ராம்.

3:56 AM