India

Uganda

United Kingdom

Malaysia

2. தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 08, 2006

அன்புள்ள தமிழ் கூறும் நல்லுலகமே,

எனது பெயர் ராம்குமார். நான் கிழக்கு ஆப்பிரிக்காவில், உகாண்டாவில் வாழ்ந்து வருகிறேன். கண்டிப்பாக ஆப்பிரிக்கா நிறைய புது அனுபவங்களை தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைதளம். இது தவிர, ஆங்கிலமும், தமிழும் மட்டுமே தெரிந்த, முக்கியமாக இந்தி தெரியாத ஒரு தமிழனாக நான் அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கும் சில பல இன்னல்கலையும் புலம்பி தீர்ப்பதாக உத்தேசம்.

குஜராத்திளும், மளையாளிகளும், சுந்தர தெலுங்கர்களும் கோலேச்சிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இவற்றில் எந்த மொழியுமே தெரியாத, மணமாகாத (அட..தனியா இருக்கேன்னு சொல்ல வர்ரேங்க!) ஒரு இளைஞனாக கஷ்டப் பட்டலும், பக்கத்திலிருக்கும் ருவான்டா போன்ற நாடுகளிலிருக்கும் நண்பர்களை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வேன். காரணம் ஆங்கிலம். உகாண்டாவும் நம் நாட்டை போலவே காலனி நாடுதான். ஆச்சரியமான விஷயம், அவர்களது ஆங்கிலம். உச்சரிப்பில் வித்தியசங்கள் நிறைய இருந்தாலும், தெளிவாக, பிழையில்லாது பேசுகிறார்கள் (பெரும்பான்மை மக்கள்). ஆங்கிலமே பிரதான மொழி. ருவான்டாவில் பிரஞ்சு.

பல நேரங்களில், நமது அரசியல்வாதிகளை நினைத்து வருத்தப் பட்டாலும், இது போன்ற சில சமையங்களில், நல்லதோ கெட்டதோ, நமக்கே நமக்கென்று, சில அடையாளங்களை (மதராசிக்கு இந்தி வராது...) கொடுத்தமைக்காக பாராட்டலாம், பல நேரங்களில் இன்னல் பட்டலும்...

கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்.

அன்புடன்,
இராம்

1 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

intresting.... write more about Uganda.... I would like to see more about Africa...

Thanks

10:02 PM